கொண்டாடுங்க!! இன்று உள்ளூர் விடுமுறை!! கலெக்டர் அதிரடி உத்தரவு!!
பொதுவாக அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் பொதுவிடுமுறையை தவிர்த்து உள்ளூர் திருவிழக்கள், பண்டிகை தினங்களுக்கேற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கம். இந்த விடுமுறைகள் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் விடப்படுகிறது. அந்த வகையில் இன்று வேலூர் மாவட்டம் ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் சிரசு ஊர்வல திருவிழா வேலூர் மாவட்டத்தில் குடியாத்தத்தில் நடைப்பெற உள்ளதால், வேலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். புகழ்பெற்ற ஸ்ரீ கெங்கையம்மன் சிரசு ஊர்வலத்தில் வேலூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்கிறார்கள். பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ் வாய்ந்த ஸ்ரீ கெங்கையம்மன் கோவில். இந்த ஆலயத்தில் இன்று மே15ம் தேதி திங்கட்கிழமை சிரசு ஊர்வல திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் பொதுமக்களும் கலந்து கொள்ளும் வகையிலும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றைய தினம் நாளில் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 24ம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாகவும், மே 25 ஞாயிற்றுக்கிழமை அச்சக பணியாளர்களுக்கு வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இன்றைய விடுமுறை தினத்தில் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலக பணிகளை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!