அயோத்தி ராமஜென்மபூமியில் கொண்டாட்டம்... 56 வகையான பிரசாதங்கள் விநியோகம்!
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் நிறுவப்பட்டது. ஜனவரி 21ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள்கலந்து கொண்டனர். இந்த கோவிலில் தினமும் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ராம நவமி உலகம் முழுவதும் விஷ்ணு பக்தர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ராமரின் பிறப்பை குறிக்கும் ராம நவமி முதன்முறையாக புதிய ராமர் கோயிலில் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு, பால ராமரின் 'சூரிய அபிஷேகம்' நிகழ்வு மிகவும் சிறப்புவாய்ந்தது. அதாவது இன்று பிற்பகலில் சூரியனின் கதிர்கள் ராமர் சிலையின் நெற்றியில் விழும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டு ராம் லல்லா சிலை நிறுவப்பட்டுள்ளது.
ராம நவமி அன்று அயோத்தியில் குழந்தை ராமருக்கு ‘சூரிய அபிஷேகம்’ அல்லது ‘சூரிய திலகம்’ என்ற அரிய நிகழ்வு நடைபெறும். ராமரின் நெற்றியில் சூரியனின் கதிர்கள் விழும் நிகழ்வை காண பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

குழந்தை ராமருக்கு இன்று பிற்பகலில் 'சூர்யா அபிஷேகம்' பரிசாக வழங்கப்படும் என பக்தர்கள் பரவசத்துடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிகழ்வின் மூலம் சூரியக் கதிர்கள் தொடர்ச்சியான ஆப்டிகல் கருவி மூலம் திசை திருப்பப்படும். சூரியக் கதிர்கள் ராமரின் நெற்றியில் பிரகாசிக்கும். தொடர்ந்து 4 நிமிடங்களுக்கு 75 மில்லிமீட்டர்கள் வரை வட்ட வடிவில் திலகம் போல பால ராமரின் நெற்றியில் சூரிய ஒளி படும். " ராமர் சிலையின் நெற்றி மையத்தில் திலகத்தின் சரியான காலம் சுமார் மூன்று முதல் மூன்றரை நிமிடங்கள் நீடிக்கும். அதில் 2 முழு நிமிடங்கள் முழு வெளிச்சம் இருக்கும்" என என CSIR-CBRI ரூர்க்கியின் விஞ்ஞானி டாக்டர் எஸ் கே பானிக்ராஹி கூறியுள்ளார்.

ராம நவமி ராமர் அவதரித்த தினமாக இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்காக அயோத்தி ராம் லாலாவின் பிறந்த திருநாளான ராமநவமி பிற்பகலில் இறைவனுக்கு பல்வேறு வகையான பிரசாதங்கள் வழங்கப்படும். புதன்கிழமை இறைவனுக்கு 56 வகையான போகப் பிரசாதம் இன்று பக்தர்களால் வழங்கப்பட்டது.
ராமநவமியை முன்னிட்டு, ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திர் நிர்வாகத்தை கவனிக்க அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா, திருவிழாவின் போது வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
ராம நவமி நாளில், பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலை 3:30 மணிக்கு தொடங்கி, பக்தர்கள் வரிசையில் நிற்க ஏற்பாடுகள் செய்யப்படும் என ட்விட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்கள ஆரத்தியில் தொடங்கி இரவு 11:00 மணி வரை தரிசனகாலத்தை 19 மணிநேரமாக நீட்டித்துள்ளது. போக் பிரசாதத்தின் போது 5 நிமிடங்களுக்கு மட்டுமே திரை மூடப்படும்.அயோத்தி முழுவதும் சுமார் 100 பெரிய LED திரைகளில் ராமநவமி கொண்டாட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
