காவல் நிலையங்களில் கொண்டாட்டம்; அமலுக்கு வந்த புதிய 3 சட்டங்களை வரவேற்று தோரணம்!

 
புதிய சட்டம் புதுவை காவல் நிலையம்

இன்று காலை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வரவேற்று புதுச்சேரி காவல் நிலையங்களில் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. அதேநேரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

புதிய சட்டம் புதுவை காவல் நிலையம்

நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில், புதுவையில் காவல் நிலையங்களில் வாழை மரம், தோரணங்கள் மற்றும் பலூன் கட்டி போலீசார் புதிய சட்டங்களை வரவேற்றனர். மேலும் புதிய சட்டம் நடைமுறை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். டிஜிபி, ஐஜி, டிஐஜி, காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்கள் அனைத்திலும் வாழை மரம், தோரணங்கள் மற்றும் பலூன் கட்டப்பட்டிருந்தது.

குற்றவியல் சட்டங்கள்

அதே நேரத்தில் புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். புதிய சட்டங்களால் பல்வேறு பாதிப்பு ஏற்படும். எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, புதுவை வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.

புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்து, பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.16 நீதிமன்றங்களை சேர்ந்த, ஆயிரத்து 200 வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பால், நீதிமன்ற பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web