போதைப் பழக்கத்தை தடுக்க சிறப்பு மையம்.. உதவி எண்ணை அறிமுகம் செய்தார் பிரதமர்!

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் மோடி வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் 112வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது; ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாட உள்ளோம். அதுமட்டுமின்றி ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அனைவரும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அதிக அளவில் வாங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாடு முழுவதும் காதி பொருட்களின் விற்பனை சுமார் 400 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகி வருகிறது என்றார்.
அம்மாவின் பெயரில் மரக்கன்று நடுவதற்கு அழைப்பு விடுத்தேன். இந்த இயக்கத்தின்படி, சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டன. நாட்டு மக்கள் அனைவரும் மரக்கன்று நடும் இயக்கத்தில் இணைய வேண்டும். நாட்டின் சுதந்திர தினம் நெருங்குகிறது. இத்தருணத்தில், ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவது மிகப் பெரிய திருவிழாவாக மாறி வருகிறது. வழக்கம் போல், இந்த ஆண்டும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்ட புகைப்படத்தை hargartiranga.com இல் பதிவேற்ற விரும்புகிறேன். மேலும் போதைப் பழக்கத்தை தடுக்க மத்திய அரசால் சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் மனாஸ். மையத்தை 1933 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்பு கொண்டால் போதைப் பழக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஆலோசனை வழங்கப்படும் என்றார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!