அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

 
மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மே 6ம் தேதி முதல்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதனால் மே 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மே 8ம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த  இரண்டு, மூன்று தினங்களாக பரவலாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.  நேற்றும் தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்னும் சற்று நேரத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிதமான மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கன மழை

அதே நேரத்தில் 21 மாவட்டங்களில் இன்று மிதமானது முதல் கனமானது வரை  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன்காணப்படும். புறநகர் பகுதிகள், நகரின் சில பகுதிகளில்  லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web