பான்கார்டு விதிமுறைகளில் மாற்றம்... செக் பண்ணிக்கோங்க !

 
பான்கார்டு

 இந்திய குடிமகனின்  வருமான வரித் துறை  அடையாள அட்டை பான்கார்டு.  பொதுமக்கள் குறிப்பிட்ட சில பண பரிவர்தனைகளுக்காக மக்கள் பான் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.   சமீபகாலமாக அனைத்து வங்கிகளும் வங்கி தேவைக்காக மக்களிடம் பான் கார்டுகளை கேட்டு வருகின்றன.  வங்கியிலோ அல்லது தபால் நிலயத்திலோ அக்கவுண்ட் திறப்பதற்கு பான் கார்டு அவசியம் . வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதற்கும் பான் கார்ட் தேவையா? அதற்கான விதிகள் என்ன? என்பது குறித்த பதிவு தான் இது.  பான்கார்ட் என்பது நிரந்தர அக்கவுண்ட் நம்பர். நமது நிரந்தர அக்கவுண்ட் நம்பரை குறிப்பதுதான் இந்த பான் கார்ட்.

ஆதார் வங்கிக்கணக்கு

இதில் 10 இலக்கு கொண்ட நம்பர் மற்றும் ஆல்பபட் எழுத்துக்கள் அடங்கியிருக்கும்.   வருமானவரி தாக்கல் மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்கு பான்கார்டு மிகவும் அவசியம்.  மொத்தமான பண பரிவர்த்தனை செய்யும் தனி நபர் மற்றும் நிறுவனங்களை கண்காணிக்க, அவர்களின் பான் டேட்டாவை வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது.  
இந்தியாவில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்கு பான் கார்டு அவசியமில்லை. அதே நேரத்தில்  ஒரே நாளில் ரூ. 50,000-க்கு மேல் உள்ள வங்கி டெபாசிட்டுகளுக்கு பான் கார்டு கட்டாயம் . ஒவ்வொரு நிதியாண்டும்  வாடிக்கையாளர்களின் மொத்த டெபாசிட் தொகை ரூ. 20 லட்சத்தைத் தாண்டினால் பான் கார்ட் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.  இந்த விதிகள்  வங்கிகள் அல்லது தபால் நிலையத்தில் அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவருக்குமே பொருந்தும். 2022ல்   பான் சமர்ப்பிப்பு தொடர்பான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி ஒரு நிதியாண்டில் ரூ. 20 லட்சத்திற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்பவர்கள் அல்லது எடுப்பவர்கள்  பான் அல்லது ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என  கூறப்பட்டுள்ளது.

போஸ்ட் ஆபீஸ் அஞ்சலகம் அஞ்சல் தபால் சிறுசேமிப்பு

அதே போல்  ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலக கணக்குகளில் ரூ. 20 லட்சத்திற்கு மேல் தொகை டெபாசிட் அல்லது தொகை எடுப்பதற்கு, பான் அல்லது ஆதார் விவரங்களை கொடுக்க வேண்டியது அவசியம்.  வங்கி, தபால் நிலையம், கூட்டுறவு வங்கிகளில் செய்யப்படும் பரிவர்த்தனைகளும் இந்த வரம்பிற்குள் அடங்கும். ஒரே ஆண்டில் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளைச் செய்ய வேண்டுமானால், குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன் பான் எண்ணுக்கு விண்ணப்பித்து பயனடையலாம். பணப்பரிவர்த்தனையின் போது குறைந்தபட்சம் e-PAN ஐ சமர்ப்பிக்க வேண்டும்  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web