மே 20 முதல் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி... பக்தர்கள் உற்சாகம்!
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் இறங்கி குளிப்பதற்கும், சதுரகிரி கோவிலில் பக்தர்கள் இரவில் தங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு மே 20 முதல் 24 வரை செல்ல சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பக்தர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!