சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம்... புதிய கமிஷ்னராக அருண் ஐபிஎஸ் நியமனம்!

 
சந்தீப் ராய்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சென்னை கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கமிஷ்னராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சந்தீப் ராய் அருண்

இந்நிலையில் தற்போது சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  அவர் காவல்துறை பயிற்சி கல்லூரி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பு  அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது புதிய கமிஷனர் ஆக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சந்தீப் ராய்

இவர் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது சென்னை மாநகர புதிய கமிஷனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  சந்தீப் ராய் ரத்தோர் தன்னுடைய பொறுப்புகளை புதிய காவல் ஆணையரிடம் ஒப்படைத்த நிலையில் அவர் தற்போது சென்னையின்  110வது கமிஷனர் ஆக பொறுப்பேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web