சென்னை கிரீம்ஸ் சாலைக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயர்... வணிகர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம்!

 
வணிகர்கள் மகாஜன சங்க

இன்று காலை மே 5 வணிகர் தினத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் வணிகர் தின நிவாரண மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டை சங்க அமைப்பாளர் த.பத்மநாபன் துவக்கி வைக்க தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க தலைவர் மயிலை எம்.மாரித்தங்கம் வரவேற்புரை நிகழ்த்தினர்.

கடந்த டிசம்பர் மாதம் மழை பெரு வெள்ளம் ஏற்பட்ட போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்காததால் மகாஜன சங்கம் சார்பில் 500 வணிகர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் இந்த மாநாட்டில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

சென்னை, தூத்துக்குடி, ஏரல் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட 500 வணிகர்களுக்கு தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், ஆச்சி மசாலா பத்மசிங் ஐசக் தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் பங்கேற்று நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

இதில் எம்.என்.ராஜா, கவிஞர் திலகபாமா, தங்கமுத்து, டி.ராஜ்குமார், ஆர்.சுந்தரேஸ்வரன், பயில்வான் ரங்கநாதன், பிரதாப் சந்தர், ஆர்.எஸ்.முத்து, புழல் தர்மராஜ், சத்திரியர் மக்கள் கட்சித் தலைவர் மின்னல் ஸ்டீபன் நாடார், திரவியம் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

மாநாட்டில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை.. 

சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலைக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படியுங்கள்: தருமபுரியில் வாகன சோதனையில் 11 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசாவைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

ஜி.எஸ்.டி. தொகையில் ஒரு சதவீதத்தை இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு அரசுகள் வழங்க வேண்டும். தயாரிப்பு உற்பத்தி பொருட்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். வண்டலூர், ஓட்டேரி மருந்து வணிகர் வினோத்குமார் கொலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.

லூலூ மார்க்கெட் எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி விடுதலையான வணிகர்களுக்கு நன்றி தெரிவிப்பது, வாடகை கடைகளுக்கு வணிகர்கள் மாநகராட்சி உரிமம் புதுப்பிக்க கடை உரிமையாளரின் வீட்டுவரி செலுத்திய ரசீதை இணைக்க வேண்டும் என்கிற மாநகராட்சி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web