வெடிவிபத்தில் உயிரிழந்த இளைஞர் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண உதவி !
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கருத்தநாகபுரத்தில் செயல்பட்டு வருகிறது தனியாருக்குச் சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் ஆலை. வழக்கம் போல் இங்கு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென இந்த ஆலையில் நேற்று ஜூன் 16ம் தேதி பிற்பகல் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்து நடந்த சமயத்தில் 3 பேர் வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த வெடிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் சதீஷ்குமார் என்பவர் படுகாயம் அடைந்தார். மேலும் 2 பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்நிலையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் அவர் இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் "திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், பாமணி வருவாய் கிராமம், வெள்ளங்குழி தேவேந்திரபுரத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மனோகரன் என்பவர் மகன் சதீஷ்குமார் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற தகவல் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் . அவரது குடும்பத்தினருக்கு ரூ3லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
