கனமழை... மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கிய உத்தரவு!
இன்று காலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, "சென்னையில் திடீர் கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அதே சமயம் சென்னை மட்டுமின்றி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களிலும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஆட்சியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மழை நேரத்தில் நிறுத்தப்பட்ட வடிகால் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் சென்னை மாநகராட்சி சார்பில் ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
