டோனட் சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி... தொடரும் விபரீதங்கள்!
சென்னை கோபாலபுரம் பகுதியில் வசித்து வரும் வழக்கறிஞர் யுவராஜ். இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டு அருகே உள்ள தனியார் பேக்கரியில் தன்னுடைய குழந்தைக்கும் அவரது உறவினர் குழந்தைகளுக்கும் டோனட் கேக்குகளை வாங்கி கொடுத்தார். இதனை சாப்பிட்ட குழந்தைகள் 2 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தைகளை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பிறகு வீட்டில் மீதம் இருந்த டோனட் கேக்குகளை பெற்றோர்கள் சோதித்த போது கேக்குகள் பூசணம் பிடித்திருந்தன.

இது குறித்து சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு குழந்தையின் பெற்றோர் சென்று கேட்டபோது கடையில் இருந்த ஊழியர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். அது மட்டுமின்றி பேக்கரியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீதம் இருந்த டோனட் கேக்குகளை குப்பையில் வீசினார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கேக் ஷாப்பில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடையில் சோதனை நடத்தி கடையின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
