அடுத்த அதிர்ச்சி... சியாச்சின் அருகே காஷ்மீரில் புதிய சாலை அமைக்கிறது சீனா!
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியில் சியாச்சின் பனிப்பாறைக்கு அருகே கான்கிரீட் சாலையை உருவாக்கி வருகிறது சீனா. இது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியை பாகிஸ்தான் 1963ல் சீனாவிடம் ஒப்படைத்தது. சீனாவின் ஜின்ஜியாங்கில் G219 நெடுஞ்சாலையின் விரிவாக்கத்திலிருந்து இந்த சாலை ஒரு இடத்தில் மலைகளின் பின்னே மறைகிறது இந்த இடம் சியாச்சின் பனிப்பாறையில் உள்ள இந்திரா கர்னல் அருகே உள்ளது. முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் கடந்த மார்ச் மாதம் இரண்டு முறை இந்த இடத்தை பார்வையிட்டிருந்தார்.
#Exclusive
— Nature Desai (@NatureDesai) April 21, 2024
Thread:
In a significant development, 🇨🇳 road has breached the border at Aghil Pass (4805 m) and entered the lower Shaksgam valley of Kashmir, 🇮🇳 with the road-head now less than 30 miles from 🇮🇳 Siachen
This permanently answers the question of Shaksgam for 🇮🇳
1/4 pic.twitter.com/TyjMcUqz2S
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி எடுத்திருக்கும் செயற்கைக்கோள் படங்களின் மூலமாக இந்த சாலை கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்படும் இந்த சீன சாலை அகில் கணவாய் வழியாக செல்கிறது. 1947 க்கு முன் திபெத் - இந்தியாவின் எல்லையாக இப்பகுதி இருந்தது. இந்த சாலை டிரான்ஸ்-காரகோரம் பாதையில் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள இந்த இடம், இந்தியாவால் இப்போதுவரை உரிமை கோரப்படுகிறது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு மத்திய அரசால் வெளியிடப்பட்ட சமீபத்திய அதிகாரப்பூர்வ வரைபடத்தில், இந்தப் பகுதி இந்தியப் பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 5,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இப்பகுதியை 1963ல் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு எல்லை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் சீனாவிடம் ஒப்படைத்தது. ஆனால் இது இந்தியாவால் இப்போது வரையில் அங்கீகரிக்கப்படவில்லை.கார்கில், சியாச்சின் பனிப்பாறை மற்றும் கிழக்கு லடாக் ஆகிய இடங்களை நிர்வகிக்கும் பொறுப்பான இந்திய ராணுவத்தின் தீயணைப்பு மற்றும் கோபப் படையின் முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகேஷ் சர்மா இது குறித்து கூறுகையில், “இந்த சாலை முற்றிலும் சட்டவிரோதமானது. இந்தியா தனது இராஜதந்திர எதிர்ப்பை சீனர்களிடம் பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!