ப்ளெக்ஸ் பேனர் மீது மின்சாரம் பாய்ந்து 10ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

 
மதன்ராஜ்

திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூர் அருகே 10ம் வகுப்பு மாணவர் மதன்ராஜ், கோவில் திருவிழாவுக்காக பேனர் வைக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கோட்டகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் மதன்ராஜ் (15). மன்னார்குடியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மதன்ராஜ் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

மதன்ராஜ்

இந்நிலையில், கோட்டகச்சேரி மாரியம்மன் கோவிலில் ஆனி மாத திருவிழா நடைபெற்று வரும் நிலையில், கோவில் திருவிழாவிற்காக மதன்ராஜூம், அவரது நண்பர்களும் சேர்ந்து ப்ளக்ஸ்  பேனர் வைத்துள்ளனர். அப்போது, அந்த பேனர் மேலே இருக்கும் மின் கம்பி மீது உரசியது. அதை அகற்ற முயன்றபோது, மதன்ராஜ் உட்பட அவரது நண்பர்கள் 3 பேர் என 4 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் இளைஞர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மதன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, மதன்ராஜ் நண்பர்களான ரூபன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்ற இருவர் சிறிய காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

பள்ளி மானவி தற்கொலை

உயிரிழந்த மதன்ராஜ் உடலை கூத்தநல்லூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web