10 ஆம் வகுப்பு மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை.. 51 வயது கூலித்தொழிலாளி போக்சோவில் கைது!
10ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியை தன்னிடம் போன் பேச சொல்லி தொல்லை கொடுத்த 51 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (வயது 51). தொழிலாளியான இவர், 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியிடம் பேசி பழகி வந்துள்ளார்.

சிறுமி தனியாக இருந்த போது பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை கேட்டு என்னிடம் செல்போனில் பேசுமாறு கூறி தொந்தரவு செய்துள்ளார். இதை பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

பின்னர், சிறுமியின் பெற்றோர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சாதிக் பாட்ஷாவை கைது செய்தனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
