துப்புரவு பணியாளர் தலைநசுங்கி பலி... கதறி துடித்த சக பணியாளர்கள்!!

 
துப்புரவு பணியாளர்கள்

சென்னை கண்ணகி நகர் பகுதியில் வசித்து வருபவர்  சிவகாமி. இவருக்கு வயது 45. இவர் சென்னை மாநகராட்சியில் 180வது வார்டில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை சிவகாமி திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சிக்னல் அருகே தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். 
பின்னர் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக சிவகாமி சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்தபோது திருவான்மியூரில் இருந்து கிழக்கு கடற்கரை  சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று மோதி சாலை நடுவே விழுந்தார்.

விபத்து
அப்போது நீலாங்கரை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி ஒன்று சிவகாமி தலை மீது ஏறி இறங்கி நிற்காமல் சென்றது. இதில் சிவகாமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார் சிவகாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆம்புலன்ஸ்


மேலும் விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து முகலிவாக்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் அஸ்வந்த் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web