மேக வெடிப்பு.. கனமழை... இமாசல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி; பலர் மாயம்.. தேடுதல் பணி தீவிரம்!

 
இமாச்சல பிரதேசம் வெள்ளம்

மேகவெடிப்பு காரணமாக இமாசல பிரதேசத்தில் கன மழை பெய்த நிலையில், ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகி இருக்கின்றனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக இமாசல பிரதேசத்தில் கன மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி  போயுள்ளது. பிரபல சுற்றுலா தலங்களான சிம்லா, சம்பா, குளு மணாலி உள்ளிட்ட பகுதியில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பால் கன மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

சிக்கிம் வெள்ளம்

சிம்லா பட்டாக்குப்பரில் 5 மாடி கட்டிடம் நொடிப்பொழுதில் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அதில் வசித்து வந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதில் உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. அந்த கட்டிடத்தின் அருகில் இருக்கும் 2 கட்டிடங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இமாச்சல்

நிலச்சரிவுக்கு பல வீடுகள் இடிந்தது. சாலைகளில் கற்கள் விழுந்து கிடப்பதாலும், சேதமாகி கிடப்பதாலும் 259 சாலைகள் மூடப்பட்டு உள்ளன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. மண்டியில் மேகவெடிப்பால் பெய்த மழையால் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களினால் 4 பேர் பலியாகியுள்ளனர். பலர் மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு இருக்கிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?