சீரடி எக்ஸ்பிரஸ் ரயிலில் வேலூர் செல்கிறார் முதல்வர்... இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை!

இன்று ஜூன் 25ம் தேதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சீரடி எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக காட்பாடி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதால், இன்று ஜூன் 25 மற்றும் நாளை ஜூன் 26 தேதிகளில் ட்ரோன்கள் பறக்க விட தடை விதித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திட்ட பயன்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் செல்லும் இடங்களில் ரோடுஷோ நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
நலத்திட்ட பயன்பாடுகளை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அந்த வகையில் இன்று ஜூன் 25 மற்றும் 26 தேதிகளில் வேலூரில் முதலமைச்சர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து ஜூன் 25, 26 தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பிறப்பித்துள்ளார்.
ஜூன் 25, 26ல் டிரோன்கள், விளம்பர பலூன்கள் பறக்க தடை விதித்துள்ளார். தடையை மீறி டிரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!