சூப்பர்... ரேஷன் கடைகளில் தேங்காய், கடலை எண்ணெய் !
தமிழகத்தில் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி அரசு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச அரிசி, தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ 30 ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கு மானிய விலையில் வழங்கி வருகிறது.
இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் & கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, தேங்காயை மதிப்பு கூட்டும் பொருள்களாக மாற்ற வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறு, குறு விவசாயிகள் அரசிடம் கடன் பெறாமல் வருமானத்தை சேமிக்கும் வகையில் உற்பத்தியை அதிகரித்து வருவாயை பெருக்க வழிவகை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!