தமிழ் கலாசாரப்படி அமெரிக்க பெண்ணுடன் கோவை இளைஞருக்கு திருமணம்!

 
சாரா
 


அமெரிக்க பெண்ணை தமிழ் கலாச்சார முறைப்படி கோவை இளைஞர் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் நவ இந்தியா பகுதியைச் சோந்த மோகன் - பிரேமலதா தம்பதியின் மகன் கௌதம் (30). இவர் கனடாவில் பள்ளி மற்றும் கல்லூரி பயின்ற நிலையில், தன்னுடன் கல்லூரியில் பயின்ற அமெரிக்கா வாஷிங்டன் டி.சி. பகுதியைச் சோந்த ராப்ட் டக்ளஸ் பிராட் - எலினிட்டா யசன்யா பிராட் தம்பதியின் மகள் சாரா (30) என்பவருடன் பழகி உள்ளார். இவர்களது நட்பு காதலில் கலந்த நிலையில், கடந்த 2019ல் கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற தங்களது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி இருவரும் கேட்டுள்ளனர். 

திருமணம் கல்யாணம் கும்பம்

மேற்படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் உறுதி அளித்த நிலையில், கௌதமும், சாராவும் பட்ட மேற்படிப்பை முடித்து கனடாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் மணமகளின் பெற்றோர் தமிழ் கலாசாரத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதால் தங்களது மகளுக்கு தமிழ்நாட்டில், தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்ய விரும்பினர். இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர்கள் கோவை வந்தனர்.

கல்யாணம்

கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று திருமண சடங்குகள் நடைபெற்றன. அப்போது சாராவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து கௌதம் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண விழாவில் அமெரிக்கா, கனடா நாட்டைச் சேர்ந்த மணமகளின், உறவினர்கள் நண்பர்கள் பங்கேற்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?