அதிர்ச்சி... பேட்மிட்டன் விளையாடிய போது மாரடைப்பால் சுருண்டு விழுந்து பலியான சோகம்

 
badminton

சமீபகாலமாக மாரடைப்பால் திடீர் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இந்த வகையான உயிரிழப்புக்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர். விளையாடிக் கொண்டிருக்கும் போதே மரணம, உடற்பயிற்சி செய்த போது மரணம், திருமண மேடையில் சரிந்து விழுந்து பலி என தினசரி செய்திகள் தொடர்கதையாகி வருகிறது.  

பேட்மிட்டன்

மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுவதால் அதில் மருத்துவ சிகிச்சைக்களுக்கும் வழியில்லை . அதிர்ஷ்டவசமாக வெகுசிலருக்கு சரியான நேரத்தில் சரியான வகையில்  முதலுதவி சிகிச்சை கொடுப்பதால் உயிர் பிழைத்து விடுவதும் நடக்கத் தான் செய்கிறது. ஆனால் எங்கேயோ, எப்போதோதான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில் உ.பி, நொய்டா செக்டார் 21 ஏவில் உள்ள ஸ்டேடியத்தில் 52 வயதில் ஒருவர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

அப்போது அவர் திடீரென கீழே சுருண்டு விழுந்தார். உடனடியாக சக விளையாட்டு வீரர்கள் ஸ்டேடியம் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web