10வது பெயிலான கலெக்டர்... மாணவனிடம் உற்சாக பேச்சு!!

 
கலெக்டர்

தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு  ஜூன் மாதத்தில் துணைத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. ஆனால் அதற்குள் பல மாணவ, மாணவிகள் தேர்வில் தோல்வி, குறைவான மதிப்பெண்களுக்காக தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் குறைவான மதிப்பெண் பெற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் அவர்களை கவனமாக கையாள வேண்டும். அதிக மதிப்பெண் பெற ஊக்கமளிக்க வேண்டுமே தவிர அவர்களை வீண் மன அழுத்தத்திற்கு ஆளாக்கக்  கூடாது எனத் தெரிவித்தார்.

திருப்பூர்

இன்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பல்லடம் அரசு மருத்துவமனையில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அந்த சமயத்தில் மருத்துவமனையின் முதலுதவி சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சிறப்பு சிகிச்சை பகுதி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் முறையாக சிகிச்சை குறித்து விசாரணை நடத்தினார்.  அவர்களின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார்.  இதனையடுத்து, 10ம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளி மாணவனை எதிர்பாராதவிதமாக சந்தித்த மாவட்ட கலெக்டர், அந்த மாணவனின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அந்த மாணவனை ஊக்கப்படுத்தும் வகையில் அவர் துன்புறுத்தக் கூடாது எனக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நான் தோல்வியடைந்தவன். பிறகு மீண்டும் தேர்வினை எழுதி படித்த நானே ஒரு மாவட்டத்தின் கலெக்டராக ஆகிட்டேன்.

பொதுத் தேர்வு

அப்படி இருக்கும் போது உன்னால முடியாதா?.. இப்போது தான் நாம் இன்னும் தைரியமாக மேலே எழுந்து வர வேண்டும். தொடர்ந்து நன்றாக படி. பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடு. நம்மால் முடியாதது என்று ஒன்றும் இல்லை. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வந்ததும் எனக்கு மொபைலில் அழைத்து கண்டிப்பாக கூற வேண்டும் என ,மாணவனுக்கு தன்னுடைய மொபைல் எண்ணை அளித்து  அறிவுரை வழங்கினார். மேலும்  நானும் வாலிபால் பிளேயர் தான். உனக்கு அதில் ஆர்வம் இருந்தால் நன்றாக விளையாடு. உன்னுடைய பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசுகிறேன். எதை பற்றியும் கவலைப்படாதே. உறுதியோடு படி. தோல்வி தான் வெற்றிக்கான அடுத்தபடியாக இருக்கும் என்று மாணவனிடம் மனவலிமை ஏற்படுத்தும் வகையில்    கலெக்டர் அறிவுரை வழங்கியது மாணவரின் பெற்றோருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web