கடன் கொடுத்த பைனான்சியர் மீது புகார்.. ஆத்திரத்தில் குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்!

 
மனோகரன்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம்  ஜி.ஆர்.நகர் பகுதியில் வசிப்பவர் மனோகரன் (60). இவர் புலியூர் செட்டிநாடு சிமென்ட் ஆலையில் உதவி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு, குடும்பத் தேவைக்காகவும், தொழில் தொடங்குவதற்காகவும் 2022-ஆம் ஆண்டு வீட்டு அடமானக் கடனாக பைனான்சியர் ரகுநாதனிடம் ரூ.23 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடனுக்காக பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடமானப் பத்திரம் பதிவு செய்வதாகக் கூறி பெறப்பட்ட பத்திரப் பதிவேட்டில், அந்த வீட்டை பைனான்ஸ் அதிபர் ரகுநாதன் தனது பெயருக்கு மாற்றி மோசடி செய்து கையகப்படுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் மனோகரன் தொடர்ந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 27) மதியம் 1 மணியளவில் காந்திகிராமம் பகுதியில் உள்ள மனோகரன் வீட்டின் மீது 10க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் வந்து பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். பின்னர் இது தொடர்பாக மனோகரனின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், தகவல் கொடுத்து 2 மணி நேரத்துக்கு மேலாகியும் கரூர் பசுபதிபாளையம் பகுதியில் இருந்து போலீசார் யாரும் வரவில்லை என மனோகரன் குற்றம் சாட்டினார். 3 மணிக்கு மேல் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தாமல்  காவல் நிலையத்துக்கு வந்து புகார் அளிக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மனோகரன் கூறும்போது, “என் குடும்பத்தினர் மீது பட்டப்பகலில் கொலைவெறி தாக்குதல் நடத்த திட்டமிட்டு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மநபர்கள் இதை தடுக்க முயன்றபோது திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கண்ணாடியையும் உடைத்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்,'' என்றார். தொடர்ந்து, ""பாதுகாப்பு வழங்காமல், பைனான்சியருக்கு உறுதுணையாக போலீசார் செயல்படுகின்றனர். கடன் தொகையை அசலாக செலுத்த தயாராக இருந்தும், பைனான்சியர் ரகுநாதன், வீட்டு பத்திரத்தை தன் பெயருக்கு மாற்றி, சொத்தை அபகரிக்க முயற்சிக்கிறார். " மேலும், எனது உயிருக்கும் எனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, கொள்ளையர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web