பகீர்... விசாரிக்க சென்ற போலீசாரை சுற்றி வளைத்து தாக்கிய வடமாநில இளைஞர்கள்!

 
காவலரை தாக்கிய வடமாநிலத்தவர்கள்
தொழிற்சாலையில் நடைபெற்ற மோதல் குறித்து விசாரிக்க சென்ற காவல்துறையினரை சுற்றி வளைத்து வடமாநிலத்தவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அம்பத்தூர்  அடுத்த பட்டரவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். தொழிற்சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஆயதபூஜை விழாவில் தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து இதுபற்றி விசாரிக்க அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் ரகுபதி, ராஜ்குமார் ஆகியோர் நேரில் சென்றனர்.

காவலரைத் தாக்கிய வட மாநிலத்தவர் 5 பேர் கைது!

அப்போது காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுற்றி வளைத்து தாக்கினர். இதனால் காவல்துறையினர் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த தாக்குதல்தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் ரோஷன்குமார், பிளாக் தாஸ், பிண்டு, ராம்ஜித், சுராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதற்கிடையே காவல்துறையினர் ஒருவரை வடமாநில வாலிபர்கள் சுற்றி வளைத்து தாக்கும் விடியோ தற்போது சமூகவலை தளத்தில் பரவி வருகிறது.

தொழிற்சாலையில் மோதலை விசாரிக்க சென்ற  போலீசாரை தாக்கிய வடமாநில வாலிபர்கள்

அந்த வீடியோவில் விசாரணை நடத்த வந்த போலீஸ்காரரை ஏராளமான வடமாநில வாலிபர்கள் கையில் கம்பு, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி நிற்கின்றனர். அப்போது சிலர் காவலரை தாக்கி விரட்டி அடிப்பதும் பின்னர் வடமாநில தொழிலாளர்கள் கும்பலாக விரட்டி செல்வதும் பதிவாகி உள்ளது. இந்த விடியோ காட்சியை அங்குள்ள தொழிலாளி ஒருவர் செல்போனில் விடியோ எடுத்து உள்ளார். இந்த விடியோ காட்சியை வைத்து தாக்குதலில் ஈடுபட்ட மற்ற தொழிலாளர்களையும் கைது செய்ய காவல்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web