திருச்செந்தூரில் குடமுழுக்கு விழா... நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 
திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோயில் உலகப்பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஜூலை 4ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளன.

திருச்செந்தூர் ரயில்

திருச்செந்தூர் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழ்கிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. குடமுழுக்கு காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் நடைபெறும். உலகம் முழுவதிலும் இருந்து இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்செந்தூர் கந்தசஷ்டி

இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவினையொட்டி ஜூலை 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நேர பரபரப்பு மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க, www.tnstc.inமற்றும் TNSTC ஆப்ஸ் மூலம் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது அதே போன்று திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம் 

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?