தொடர் விடுமுறை... குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!

 
குற்றாலம்

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து உள்ள நிலையில், தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் தொடங்கி விடும். இந்த காலத்தில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளின் தண்ணீர் ஏற்பட்டு அவ்வப்போது சாரல் மழை பொழிந்து குளுகுளு நிலைமை நீடித்து சுற்றுலாப் பயணி களைக் கவர்ந்திழுக்கும். இதனால் குற்றால சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். 

குற்றாலம்

இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த மே மாதம் இறுதியிலேயே குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழ தொடங்கியது.  தொடர்ந்து சாரல் மழை இல்லாவிட்டாலும் அருவிகளில் தண்ணீர் வரத்தை இன்றும் நீடித்து வருகிறது.  இதற்குக் காரணம் குற்றாலம் மலைப்பகுதியில் அவ்வப்போது பெய்யும் சாரல் மழை தான்.

குற்றாலம்

இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்திற்கு  சுற்றுலா பயணிகளில் வருகை அதிகரித்து வருகிறது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி,பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக இருக்கிறது.  இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!