வாக்கு எண்ணிக்கை தொடக்கம்... அடுத்த பிரதமர் யார்?
![வாக்கு எண்ணிக்கை](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/d6b3471076c3aae4223b43fb63caf110.png)
இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இங்கு மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் மே 13ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் இதில் ஜகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும், பவன் கல்யாணின் ஜனசேனாவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தும் களம் இறங்கியுள்ளன. இதில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி ஆட்சியை தக்க வைத்துக் கொள்வாரா அல்லது சந்திரபாபு நாயுடு ஆட்சியை கைப்பற்றுவாரா என எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!