வெள்ளத்தில் சென்ற ஜோடி.. பெண்ணிடம் எல்லை மீறிய கும்பல்.. அதிர்ச்சி வீடியோ வைரல்!

 
லக்னோ ஜோடி

லக்னோவில் பெய்த கனமழையால் சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது. இந்நிலையில், லக்னோவில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் பைக்கில் சென்ற பெண்ணை ஒரு கும்பல் துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாஜ் ஓட்டல் பாலத்தின் கீழ் வெள்ளம் சூழ்ந்த சாலையில் பைக்கில் ஆணும் பெண்ணும் வந்தனர். அப்போது வழியில் ஒரு கும்பல் தேங்கியிருந்த தண்ணீரை அவர்கள் மீது தெறிக்கத் தொடங்கியது. பின்னர் பைக்கை பின்னால் பிடித்து இழுத்து நிறுத்தினர்.


இதனால் நிலைதடுமாறி இருவரும் சாலையில் வெள்ளத்தில் விழுந்தனர். அதையடுத்து பாலத்தின் அடியில் இருந்த கும்பலை போலீசார் விரட்டியடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, லக்னோவின் காவல் உதவி ஆணையர், கூடுதல் காவல் ஆணையர் மற்றும் காவல்துறை துணை ஆணையர் ஆகியோர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web