ஜூலை 1 முதல் கிரெடிட் கார்டு பில் செலுத்தும் விதிமுறைகளில் மாற்றம்!
ஜூலை 1 முதல் பல விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளன. அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஜூலை 1 முதல் சில குறிப்பிட்ட செய்திகள் மூலமாக பில் செலுத்த முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூன் 30ம் தேதிக்கு பின்னர் அனைத்து கிரெடிட் கார்டு பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் அதாவது பிபிபிஎஸ் மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போன் பே, cred, BillDesk, Infibeam Avenues ஆகிய நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றியுள்ளன. இதனால் இந்த விதிமுறைகளை பின்பற்றாத வங்கிகளின் கிரெடிட் கார்டுக்கு கட்டணத்தை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகளில் செயலிகளில் இருந்து பில் செலுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!