சிவகங்கையில் இன்று எடப்பாடி சூறாவளி சுற்றுப்பயணம்.. முழு பயண விபரம்!
2026ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து பிரச்சாரம், சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளன. அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அதன்படி இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) சிவகங்கை மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்ற தொகுதிக்கு ஒரு இடம் என்ற வகையில் அவர் பிரச்சாரம் செய்கிறார். அதன்படி காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய 4 இடங்களில் அவர் பேசுகிறார்.

இன்று மாலை 4.30 மணி அளவில் காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலை அருகில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். பின்னர் மாலை 5.30 மணி அளவில் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகேயும், இரவு 7:45 மணி அளவில் சிவகங்கை அரண்மனை வாசலிலும் மக்களை சந்தித்து பேசுகிறார். இரவு எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் தங்குகிறார்.
பின்னர் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் சிவகங்கை சன் ராக்ஸ் மகாலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் மஞ்சுவிரட்டு பந்தயம், வடமாடு நலச்சங்கம், விவசாய சங்கம், விளையாட்டு வீரர்கள், தென்னை நார் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடல் நடத்துகிறார்.

மாலை 4.30 மணிக்கு மானாமதுரை தேவர் சிலை அருகே அவர் மக்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அவர் செல்கிறார். சிவகங்கை மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில் மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், காளியாட்டம் போன்ற கலை நிகழ்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
