அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்... அகவிலைப்படி , போனஸ் உயர்வு... !!

 
அரசு ஊழியர்கள்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதனை முன்னிட்டு மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்படி , ஜூலை, 1ம் தேதி முதல், 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தப்பட்டுள்ளது.    மற்ற ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கு போனஸ் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.பாதுகாப்பு ஊழியர்களுக்கு போனஸ் தொகை 76 நாள் சம்பளத்தின் படி வழங்கப்படும். உற்பத்தி அல்லாத போனஸிற்காக, நவம்பர் 10ம் தேதிக்குள் பாதுகாப்பு ஊழியர்களின் கணக்குகளுக்குத் தொகையை அனுப்பவும்  பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  

அரசு ஊழியர்களுக்கு 3 வகை போனஸ்!! அதிரடி அறிவிப்பு!!


ஜேசிஓக்கள், ஓஆர்கள் மற்றும் கடற்படை  ,   விமான சேவைகள் உட்பட  சேவைகளின் ஊழியர்கள் தரவரிசையில் குறிப்பிடப்பட்டுள்ள நிதி அமைச்சகத்தின் OM இன் படி தற்காலிக போனசுக்கு தகுதியுடையவர்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது.   ஆயுதப்படை வீரர்களுக்கு நவம்பர் 10 வரை போனஸ் பணம் வழங்கப்படும். 
பாதுகாப்பு அமைச்சக ஊழியர்களின்  அகவிலைப்படியை உயர்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

அரசு ஊழியர்கள்

ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் அதிகாரி பதவிக்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு 46% அகவிலைப்படியை தற்போதுள்ள 42% விகிதத்தில் இருந்து ஜூலை 1 முதல் அதிகரிக்கவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.  3 மாத நிலுவைத் தொகையும் நவம்பர் மாதத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுபோன்ற சூழ்நிலையில், தீபாவளிக்கு முன், சம்பள நிலுவை மற்றும் போனஸ் மற்றும் அதிகரித்த அகவிலைப்படி ஆகியவை ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றன.  இதன் மூலம் அவர்களின் கணக்கில் ரூ.1 லட்சம் வரை அகவிலைப்படி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web