பொங்கல் தொடர் விடுமுறை... ஆம்னி பேருந்துகளைக் கண்காணிக்க 30 குழுக்கள் அமைப்பு!
இந்த வருடம் தைப் பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊரில் உறவினர்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாட பலரும் திட்டமிட்டு வருகின்றனர்.
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்த நிலையில், பொங்கலுக்கு அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்தது.
இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த நிலையில், அதிக கட்டண வசூல் உள்ளிட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளைக் கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வரி நிலுவை, அதிக சுமை, பர்மிட் இல்லாமல் இயக்குவது உள்ளிட்டவற்றை இந்த குழு கண்காணிக்கும் என போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆம்னி பேருந்துகள் அதிகமாக இயக்கப்படும். பொங்கல் பண்டிகை நெருங்க உள்ளதால், ஆம்னி பேருந்துககள் இயக்கம் அதிகமாக இருக்கும். எனவே, ஆம்னி பேருந்துகளில் வரி நிலுவை, அதிக சுமை, அதிக கட்டணம், பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களும் காணப்படும். இதுகுறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க, தமிழகம் முழுவதும், 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இருப்பர். அடுத்த வாரம் முதல் இந்த சிறப்பு குழுக்கள் செயல்படும். இக்குழுவினர், நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் திடீர் சோதனை நடத்துவர். ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் இருந்தால், அபராதம் விதிப்பது, 'பர்மிட் சஸ்பெண்ட்' போன்ற நடவடிக்கைகளை எடுப்பர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!