MBBS மற்றும் BDS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 29 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் இந்த ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே விண்ணப்பம் தொடங்குவது வழக்கமாக இருந்தது.
நடப்பாண்டில் மாணவர்களுக்கு விண்ணப்பிக்க போதுமான அவகாசம் வழங்கும் வகையில் முன்கூட்டியே ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி தான் வெளியிடப்பட்டது.
அதன் பிறகு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஜூன் 25ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது விண்ணப்ப காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!