பாதுகாப்பு படையினர் நடத்திய பயங்கர துப்பாக்கிச்சூடு.. பலியான பயங்கரவாத அமைப்பின் தலைவர்!
![இரண்டு பயங்கரவாதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்பு படை: காஷ்மீரில் மீண்டும் பதற்றம்..!!](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/migrated/d131b7d2341e81a0ca7f89570a4e1bb5.jpg)
காஷ்மீரில் உள்ள டிஆர்எஃப் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாசித் தார் . அவரை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பாசித் தார் குட்வானி என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாசித் தார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும், அவருடன் இருந்த மற்றொரு பயங்கரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!