போலீஸ் எஸ்.பி.க்கு கொலை மிரட்டல்... அதிர வைத்து 3 சிறுவர்கள்!

 
எஸ்பி
 

கடந்த சில தினங்களுக்கு முன்பாக, இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில், "கொம்பன் ஜெகன் டீம் (Komban_jegan_team)" என்ற முகவரியில் இருந்து, திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், புகைப்படத்தை பகிர்ந்து, "விரைவில் தலைகள் சிதறும்" என "Komban Brothers" என்ற பதிவை பகிர்ந்து பொதுமக்கள் மத்தியில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், கலவரங்களை தூண்டும் விதத்திலும் இன்ஸ்டா ஸ்டோரி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மேற்படி இன்ஸ்டா ஸ்டோரி பதிவேற்றம் செய்தது 16 வயது சிறுவன் என தெரிய வந்தது. இதன் அடிப்படையில், மேற்படி இளஞ்சிறார் திவ்யேஷ் என்பவர் மீது, வாத்தலை காவல் நிலைய குற்ற எண்- 69/24, சட்டபிரிவு 153(В), 505(2) IPC r/w 66(D) IT Act-21 09.06.2024- வழக்குப்பதிவு செய்து, மேற்படி நபரை அழைத்து விசாரணை செய்த போது, மேலும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் விஷால் (18), த.பெ. வீரபத்திரன் ஆகிய இருவருக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்தது.
மேற்படி மூவரும் இளஞ்சிறார்கள் என்பதால், சமூக வலைத்தளங்களில் அச்சுறுத்தும் வகையில் பதிவிடாமல், கவனமாக கையாள வேண்டுமென கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இதில் சம்மந்தப்பட்ட 17 வயதுடைய மற்றொரு சிறுவனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இது போன்று, பொதுமக்கள் மத்தியில் கலவரம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web