பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. ஜூலை 1ம் தேதி இந்த பட்டாசு ஆலையில் காலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விபத்தில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல் வெளியாகின.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகு ராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!