பத்திரம் மக்களே... 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 
கனமழை

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில், இன்றும் தமிழகத்தில் கோவை, திருப்பூர் உட்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடதமிழக பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று அக்டோபர்  9ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மழை  பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

இன்று  9 மாவட்டங்களில் கனமழை !! கவனமா இருங்க மக்களே!!

தேனி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

நாளை அக்டோபர் 10ம் தேதி திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர்  ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.  

கனமழை மழை கர்நாடகா

சென்னையைப் பொறுத்த வரையில் வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 12ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழைக் காலங்களில் பாதுகாப்பா இருங்க. மின் சாதனங்களைக் கவனமுடன் கையாளுங்க. கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்களைத் தனியே வெளியே அனுப்பாதீங்க.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!