ஐரோப்பிய தேர்தலில் படுதோல்வி.. பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் ராஜினாமா!

 
அலெக்சாண்டர்

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பெல்ஜியத்தின் பிரதமர் அலெக்சாண்டர் பதவி விலகினார். அதேபோன்று, பிரான்சில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனுக்கான நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட 27 நாடுகள் பங்கேற்றன. இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகின் 2வது பெரிய நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். எனவே இந்த தேர்தல் அங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பெல்ஜியத்தின் ஆளும் கட்சியான பிளெமிஷ் லிபரல்ஸ் மற்றும் ஜனநாயக கட்சி தேர்தலில் படுதோல்வியை சந்தித்தன. இதில் அக்கட்சிக்கு 5.8 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இந்த தேர்தலில் பிரதமர் அலெக்சாண்டர் டி குரு தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எனினும் தேர்தல் தோல்விக்கு முழுப்பொறுப்பேற்பதாக அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். அதன்படி பெல்ஜியம் மன்னர் பிலிப்பை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார்.

பிரதமர் அலெக்சாண்டர் ஒப்புதல் அளித்தவுடன் பதவி விலகுவார் என்று அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோல், பிரான்சில், ஐரோப்பிய யூனியன் தேர்தலில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான ஆளும் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அவரது மறுமலர்ச்சிக் கட்சி சுமார் 15 சதவீத வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இதனையடுத்து, நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்த வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இம்மாத இறுதியில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்த முடிவு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web