நாய் கடித்தவர்கள் சிகிச்சை பெற தாமதமானால் உயிருக்கு ஆபத்தாக முடியலாம்... சுகாதாரத்துறை எச்சரிக்கை!

 
நாய்


 
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18 பேருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாய் கடித்த இடத்தை முறையாக கழுவாமல் இருப்பது, தாமதமாக சிகிச்சைக்கு வருவது, தடுப்பூசி கால அட்டவணையை மீறுவது ஆகியவை சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக மாறும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெறி நாய் 
கேரளாவில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியும் இரு சிறார்கள் உயிரிழப்பை அடுத்து, ரேபிஸ் சிகிச்சை வழிகாட்டுதலை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. பொது சுகாதாரத்துறையின் எச்சரிக்கைப்படி, நாய் கடித்த பிறகு தாமதமாக சிகிச்சை பெறுவது ஆபத்தாக முடியலாம்.  
நாய்க்கடி ஏற்பட்டதும்  உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி (ரேபிஸ் தடுப்பூசி) செலுத்துவது மிக மிக முக்கியம். ரேபிஸ் வைரஸ் உடலில் பரவிய பிறகு, தாமதமாக சிகிச்சை எடுத்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ஏனெனில் ரேபிஸ் ஒரு கொடிய நோயாகும், முழுமையாக அறிகுறிகள் தோன்றிய பிறகு சிகிச்சை பலனளிக்காது. 

நாய்
நாய் கடித்ததும் உடனடியாக  கடிபட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் 10-15 நிமிடங்கள் நன்கு கழுவ வேண்டும்.   மருத்துவமனைக்குச் சென்று ரேபிஸ் தடுப்பூசி   மற்றும் தேவைப்பட்டால் ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் செலுத்தலாம்.   முதல் ஊசி கடித்ததும்  நாய் கடித்த 24-48 மணி நேரத்திற்குள் செலுத்தப்பட வேண்டும். முழு தடுப்பூசி அட்டவணையை (பொதுவாக 4-5 டோஸ்) மருத்துவர் பரிந்துரையின் படி பின்பற்ற வேண்டும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?