தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை... டெல்டா வெதர்மேன் அலெர்ட்!
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையில் நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் தென்மேற்கு வங்க கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 370 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாக தெரிகிறது.
டெல்டாவெதர்மேன் தினசரி வானிலை அனுமானம் டிசம் 21, 2024
— Delta Weatherman (Hemachander R) (@Deltarains) December 21, 2024
==> மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
==> அடுத்த 36 மணி நேரத்தில் இந்த தாழ்வு மண்டலம் வறண்ட காற்றின் ஊடுருவல் காரணமாக கடலிலேயே வலுவிழக்க துவங்கும். pic.twitter.com/ERiZS4ki6V
இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையில் நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்திருந்தது.இது குறித்து டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை, இது அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு மத்திய வளைகுடாவில் நின்று கொண்டே இருக்கும். பின்னர் வறண்ட காற்றினால் பாதிக்கப்பட்டு காலியான ஓட்டுடன் மீண்டும் தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.விரிவான அப்டேட் விரைவில் வெளியாகும்” என பதிவிட்டுள்ளார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!