நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்... 4 மாணவிகள் உட்பட 11 பேர் கைது!

 
போராட்டம்

திருச்சியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வு குளறுபடிகளை சுட்டிக் காட்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாணவர் சங்கத்தினர் கோஷம் எழுப்பினர். அப்போது போலீசார் அவர்களை கைது செய்ய முயன்ற போது, அவர்களில் சிலர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சிலர் அஞ்சல் அலுவலக வாசலில் இருந்த தடுப்புகளை தாண்டி குதித்து அஞ்சல் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர்.

போராட்டம்

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையர் கே.முருகவேல் தலைமையிலான போலீசார் தடுப்புகளை தாண்ட முயன்ற மாணவர்களை இழுத்தனர். இதில் நிலை தடுமாறி விழுந்த மாணவர்கள் மீது போலீசாரும் விழுந்தனர். போலீசாரும், மாணவர்களும் சாலையில் கட்டிக்கொண்டு உருண்டனர்.

ஒரு மாணவர் தடுப்புகளை தாண்டி அஞ்சல் அலுவலக நுழைவாயில் கதவு மீது ஏற முயன்றார். அவரையும் போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கி வந்தனர். சுமார் பத்து நிமிட போராட்டத்துக்கு பிறகு போலீசார் நான்கு மாணவிகள் உட்பட 11 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web