தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினர்.. நாடு கடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
நீதிமன்றம்

அசாமில் பல ஆண்டுகளாக ஏராளமான வெளிநாட்டினர் தடுப்பு மையங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த ஏப்ரல் மாதம் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அசாம் மாநில சட்டப்பணிகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

அதன்படி, சட்டப் பணிகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் உரிய அறிக்கை தாக்கல் செய்தது. அஸ்ஸாமில் உள்ள தடுப்பு முகாமில் 17 வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்த 17 வெளிநாட்டினர் மீது எந்த குற்றமும் பதிவு செய்யப்படவில்லை.

உச்ச நீதிமன்றம்

எனவே, அவர்களை நாடு கடத்த இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து என கூறினர். மேலும், தடுப்பு மையங்களுக்குச் சென்று, வழங்கப்படும் வசதிகளைக் கண்டறிய ஒரு குழுவை அமைக்குமாறு அசாம் சட்டப் பணிகள் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web