வீடு கட்டுவதில் தகராறு.. அண்ணனை கட்டையால் தாக்கி கொடூரமாக கொன்ற தம்பி கைது!

 
சரவணன்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (35). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி புனிதா (30) என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சரவணன் தனது சொந்த ஊரான சாத்தூரில் புதிதாக வீடு கட்டியதாக தெரிகிறது. இதனிடையே சரவணன் தனது உடன்பிறந்த சகோதரர்களான சத்தியமூர்த்தி (28), சௌந்தர்ராஜன் (26) ஆகியோருடன்  மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஆனால், சகோதரர்கள் இருவருக்கும் திருமணம் ஆகாததால், வீடு கட்டுவதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு சரவணன் தனது சகோதரர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அவருக்கும், அண்ணன் சத்தியமூர்த்திக்கும் இடையே வீடு கட்டுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, அருகில் இருந்த கட்டையை எடுத்து சரவணனை பலமாக தாக்கினார்.இதை தடுக்க முயன்ற தம்பி சௌந்தரராஜனையும் தாக்கியதாக தெரிகிறது.

கட்டையால் அடித்து கொலை

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சரவணன் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு ஊரக போலீசார் குடிபோதையில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி சத்தியமூர்த்தியை கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web