நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த தீபாவளிக்கான ரயில் டிக்கெட்.. பொதுமக்கள் ஏமாற்றம்!
நாடு முழுவதும் அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை தீபாவளிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நகரங்களில் வசித்து வருபவர்கள் சொந்த ஊர் செல்ல முன்கூட்டியே முன்பதிவு செய்வார்கள்.

வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் அக்டோபர் 16 ம் தேதி வியாழக்கிழமை செல்பவர்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இணையதளம் மற்றும் ரயில் நிலைய முன்பதிவு கவுண்டர்களில் காலை 8 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தென்காசி இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் 10 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காட்டியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
