திமுக அரசு 256 திட்டங்களைக் கைவிட முடிவு... அண்ணாமலை கடும் விமர்சனம்!

 
அண்ணாமலை


சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை திமுக அரசு கைவிடப்போவதாகத் தெரிவித்த முடிவை பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இவர்கள் சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக தந்தையின் சிலை வைத்தது மட்டும் தான் என்று விமர்சித்துள்ளார்.

பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை இது குறித்த தனது எக்ஸ் பதிவில், ``ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று விளம்பரத்துக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிவந்த திமுக அரசு, தற்போது, பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால், கைவிடுவதாக முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியிருக்கிறது.

அண்ணாமலை

கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவிகிதம்கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருந்த திமுக அரசின் லட்சணம், ஆட்சியின் இறுதியாண்டில் வெளியாகிவிட்டது. சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

சொன்னது எதையும் செய்யவில்லை என்பதற்கான சாட்சி, கைவிடப்பட்ட இந்த 256 அறிவிப்புகள் தான். நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர்ஊராக அவரது தந்தையின் சிலை வைத்தது மட்டும் தான்'' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?