கொடூரமாக கொல்லப்பட்ட திமுக பிரமுகர் மகன்... வெளியான பகீர் காரணம்!

 
திமுக பிரமுகர் மகன் வெட்டிக் கொலை

நேற்று சென்னை திருவொற்றியூரில் விம்கோநகர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் விவேகானந்தனின் மகன் காமராஜ் கொடூரமாக முகமூடி அணிந்த மர்ம கும்பலால் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மர்ம கும்பல் கொலைச் செய்ததற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

கொலைச் செய்யப்பட்ட காமராஜ், தனது தந்தையுடன் இணைந்து திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், வழக்கம் போல காமராஜ் நேற்று காலை அவரது அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அப்போது, அவரது அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல்  பயங்கர ஆயுதங்களுடன் அலுவலகத்தின் உள்ளே புகுந்து காமராஜை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் சரிந்த காமராஜை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி காமராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காமராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காமராஜ், திருவெற்றியூர் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டரை எடுத்து பணி செய்ததில், போட்டி எழுந்ததாகவும், வேறு யாருக்கும் டெண்டர்கள் போக விடாமல், காமராஜ் செய்து வந்ததால் இந்த கொலை அரங்கேறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web