தேதி மாற்றம்... கோவையில் ஜூன் 15ம் தேதி திமுக முப்பெரும் விழா... உற்சாகத்தில் தொண்டர்கள்!

 
முப்பெரும் விழா
 

மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் வகையில், கோவையில் வரும் 14ம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேதி மாற்றப்பட்டு ஜூன் 15ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

முப்பெரும் விழா

கோவை செட்டிபாளையம் எல் அண்ட் டி புறவழிச்சாலை பகுதியில் முப்பெரும் விழா நடைபெறும் இடத்தில் அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி, “மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக வெற்றியை வழங்கியுள்ளனர். இதையடுத்து, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தல், வெற்றிவியூகம் வகுத்த திமுக நிர்வாகிகளுக்குப் பாராட்டு ஆகிய முப்பெரும் விழாவை, கோவையில் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார்.

ஸ்டாலின்

ஜூன் 15ம் தேதி மாலை செட்டிபாளையம் எல் அண்ட் டி புறவழிச்சாலை பகுதியில் நடைபெறும் விழாவில், வெற்றி பெற்ற 40 மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள், திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க உள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web