கடலுக்குள் மீன்பிடிக்க போகாதீங்க... மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இன்றும் தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்டும், வடதமிழக மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லையில் பலத்த காற்று , இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலைஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று மே 16ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நெல்லை கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை மற்றும் கடலில் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
