ஜூலை 10 இடைத்தேர்தல்... வாக்களிக்க தேவையான ஆவணங்கள்.!

இந்தியா முழுவதும் 7 மாநிலங்களில் தமிழகத்தின் விக்கிரவாண்டி உட்பட 13 தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து விக்கிரவாண்டியில் ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு ஜூன் 14ம் தேதி வெளியிடப்பட்டு அன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஜூன் 21 வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள். தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஜூன் 24 ம் தேதி பரிசீலிக்கப்பட்டது. போட்டியிட விரும்பாதவர்கள் மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள். இன்று மாலை வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நடைமுறைகள் ஜூலை 15ம் தேதி நிறைவு பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு, பிஹார் மாநிலம் ரூபாலி, மேற்கு வங்கம் மாநிலம் ராய்கஞ்ச், ரணகாட் தெற்கு, பாக்தா, மணிக்தலா, தமிழ்நாடு மாநிலம் விக்கிரவாண்டி , மத்திய பிரதேசம் அமர்வாரா, உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத், மங்களாவூர், இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் டேரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய 13 தொகுதிகளுக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
வாக்களிக்க தேவையான ஆவணங்கள் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. அதன்படி, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும் .
வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய/ மாநில அரசுகள்/ பொதுத் துறை நிறுவனங்கள்/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், பாரளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை இவைகளில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!