நாளை தீபாவளிக்கு இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க... !!

 
தீபாவளி


நாளை இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இந்துக்களின் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு அறிவியல் பூர்வமான நம்பிக்கைகளும், புராண சம்பவங்களும் வரலாற்று கதைகளும் இருக்கிறது.ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் கொண்டாடப்படும் தீபாவளி வாழ்வில் காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற அகஇருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகை. அதிகாலை 3 மணி – முதல் 6 மணிக்குள் வீட்டில் சுடு தண்ணீரில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

தீபாவளிக்கு இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க!!


வீட்டில் செய்த இனிப்பு உணவுகளை மகாலட்சுமி சமேத மகா விஷ்ணுவிற்கு வெற்றிலை பாக்கு பழத்துடன் படைத்து அகல் விளக்கு ஏற்ற வேண்டும். புத்தாடைகளை மஞ்சள் தடவி பூஜையில் வைத்து அணிந்து கொள்ள வேண்டும். பெரியவர்களின் காலில் விழுந்து நல்லாசி பெற வேண்டும்.அன்றைய தினம்  மாலை லட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பு. அமாவாசை திதியும் வியாழக்கிழமையும் இணைந்த தீபாவளி திருநாளில் செய்யும் லட்சுமி குபேர பூஜை மிக மிக சிறப்பு. லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் மாலை 5.30 மணி முதல் 8 மணிவரை . இந்த நேரங்களில் பூஜை செய்து வாழ்வின் எல்லா வளங்களையும் பெறுவோம்.

தீபாவளிக்கு வீட்டில் ஒற்றை படை எண்ணிக்கையில் விளக்கேற்றி சாமி கும்பிட வேண்டும். அவரவர் குல வழக்கப்படி பிரார்த்தனைகள் நிறைவேற சங்கல்பம் செய்து வழக்கமான முறையில் பூஜை செய்யலாம். அத்துடன் நைவேத்தியமாக இனிப்புக்கள் பழங்களை வெற்றிலை பாக்குடன் வைக்க வேண்டும். பலரும் வீட்டில் இந்த நாளில் அசைவம் சேர்த்துக் கொள்கின்றனர்.

தீபாவளிக்கு இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க!!

நரகாசுரனை கொன்ற பாவம் அசைவம் சாப்பிட்டால் தீரும் என்ற வியாக்னத்தையும் சேர்த்து கொள்கின்றனர். ஆனால் அமாவாசை தினத்தில் வருவதால் அசைவத்தை தவிர்ப்பது நல்லது . நோன்பு எடுக்கும் பழக்கம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அசைவத்தை சேர்த்தால் பாவங்கள் சேரத் தொடங்கும் இதனால் இதை மட்டும் தவிர்த்து விடுதல் உத்தமம்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web